சீர்காழி: 6783 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

சீர்காழி:  6783 மாணவர்களுக்கு விலையில்லா  மிதிவண்டிகள்

மிதிவண்டிகள் வழங்கிய அமைச்சர் 

சீர்காழியில் 6783 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை சுற்றுச்சூழல் கால நிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளியில், மேல்நிலை முதலாமாண்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகளை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலைமாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார். சீர்காழி நகர பகுதிகளில் உள்ள +1 மாணவர்கள் 6,783 மாணவர்களுக்கு ரூபாய் 3.26 கோடி மதிப்பில் மிதிவண்டிகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உமாமகேஸ்வரி சங்கர், மயிலாடுதுறை ஒன்றிய குழு தலைவர் காமாட்சி மூர்த்தி,மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை , முதன்மை கல்வி அலுவலர் அம்பிகாபதி, குண்டாமணி செல்வராஜ்,துர்கா பரமேஸ்வரி, நகராட்சி, உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

Tags

Next Story