தங்கை கணவருக்கு அரிவாள் வெட்டு - பெண் கைது

தங்கை கணவருக்கு அரிவாள் வெட்டு - பெண் கைது

ஷோபனா 

கும்மிடிப்பூண்டி அருகே துராப்பள்ளத்தில் தங்கையை வெட்ட வந்த தங்கையின் கணவரை அரிவாளால் வெட்டிய பெண் கைது செய்யப்பட்டார்.

செங்குன்றம் அடுத்த விஜய் நல்லூர் பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார். இவரது மனைவி மேனகா. கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனது சொந்த ஊரான கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் துராபள்ளம் கிராமத்தில் உள்ள தாய் வீட்டில் மேனகா வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் மனைவியை பார்க்க துறாபள்ளம் வந்த நந்தகுமார், குடிபோதையில் மனைவியிடம் தகராறு செய்ததுடன் கத்தியால் மனைவியை வெட்ட முயற்சித்ததாக கூறப்படுகிறது.

மேனகாவின் அக்கா அம்பிகா தடுத்த முற்பட்டார் அப்போது அம்பிகாவின் கையில் கத்தி கிழித்து காயம் ஏற்பட்டது. இதை பார்த்த மற்றொரு அக்கா சோபனா என்பவர் நந்தகுமாரிடமிருந்து கத்தியை பிடுங்கி நந்தகுமார் தலையில் சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த நந்தகுமார் சிகிச்சைக்காக கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக இன்று காலை 8 மணி அளவில் ஷோபனாவை கைது செய்த ஆரம்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story