ராசிபுரத்தில் சீதா ராமர் கல்யாண உற்சவம்
சிறப்பு பூஜைகள்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பெரிய அக்ரஹாரம் இராஜாஜி தெரு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ அயோத்தி ராமர் மடத்தில் ராமநவமி உற்சவ விழா தொடர்ந்து 10 நாட்கள் ஆக சிறப்பாக நடைபெற்று வந்தது.
தினந்தோறும் ராமநவமி விழாவை முன்னிட்டு ஸ்ரீ சீதா தேவி ஸ்ரீ ராமர் ஆகியோருக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று பஜனை பாடலுடன் மகா தீபாரணை நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக ராஜகுமாரி ஸ்ரீ சீதா தேவி ராஜகுமார ஸ்ரீ ராமருக்கு திருக்கல்யாண உற்சவம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. மு
ன்னதாக சீதா ராமர் பஜனை பாடல்கள், குரு கீர்த்தனை, கோவிந்த கீர்த்தனம், மற்றும் பல்வேறு இசை வாத்தியங்களுடன் பக்தி பாடல் பாடி தாம்பூல சீர்வரிசை மாற்றி திருக்கல்யாணம் உற்சவம் வரதராஜபுரம் ப்ருஹ்ம ஸ்ரீ சாய்ப்ரஸாத் பாகவத குழுவினரால் நடத்தி வெகு விமர்சையாக கொண்டாடினர். தொடர்ந்து பெண்கள் ஸ்ரீ சீதா தேவிக்கும் ஸ்ரீ ராமருக்கும் ஆரத்தி எடுத்து தீபாரணை காட்டப்பட்டது. மேலும் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கினர். இந்த திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சியை ஸ்ரீ சீதா ராதா கல்யாண உற்சவ குழு கமிட்டி நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர். இதில் திரளானோர் கலந்து கொண்டு திருக்கல்யாண உற்சவத்தை கண்டு ரசித்து வணங்கி சென்றனர்.