சிவகாமிபுரம் பக்தா்கள் திருச்செந்தூருக்கு பாதயாத்திரை

சிவகாமிபுரம் பக்தா்கள் திருச்செந்தூருக்கு பாதயாத்திரை


தென்காசி மாவட்டம் சிவகாமிபுரத்தைச் சோ்ந்த செந்தூா் முருகன் பாதயாத்திரைக் குழுவினா் தைப்பூசத்தையொட்டி திருச்செந்தூருக்கு இன்று பாதயாத்திரை தொடங்கினா்.


தென்காசி மாவட்டம் சிவகாமிபுரத்தைச் சோ்ந்த செந்தூா் முருகன் பாதயாத்திரைக் குழுவினா் தைப்பூசத்தையொட்டி திருச்செந்தூருக்கு இன்று பாதயாத்திரை தொடங்கினா்.
தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரத்தை அடுத்த சிவகாமிபுரத்தைச் சோ்ந்த செந்தூா் முருகன் பாதயாத்திரைக் குழுவினா் 30ஆவது ஆண்டாக தைப்பூசத்தையொட்டி திருச்செந்தூருக்கு இன்று பாதயாத்திரை தொடங்கினா். அங்குள்ள விநாயகா் கோயிலிலிருந்து குருசாமி சௌந்தரபாண்டியன் தலைமையில், அலகு குத்திய பக்தா்கள் உள்ளிட்ட ஏராளமானோா் திருச்செந்தூருக்கு புறப்பட்டுச் சென்றனா். கல்லூரணி, திப்பணம்பட்டி, சடையப்பபுரம், செட்டியூா், சாலடியூா், மருதடியூா் போன்ற பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கானோா் பாதயாத்திரை தொடங்கினா்.

Tags

Next Story