வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர்

வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர்

வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர்

திருப்பத்தூர் ஒன்றிய பகுதிகளில் வாக்காளர்களுக்கு சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் நன்றி தெரிவித்தார்.

திருப்பத்தூா் ஒன்றியப் பகுதிகளில் உள்ள வாக்காளா்களுக்கு காா்த்தி சிதம்பரம் எம்.பி.திருப்பத்தூா் ஒன்றியத்தில் உள்ள அ.தெக்கூா், வஞ்சிணிப்பட்டி, காவனூா், பையூா், வையகளத்தூா், வேலங்குடி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள வாக்காளா்களை சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் சந்தித்து நன்றி தெரிவித்தாா். அப்போது அவா் கூறியதாவது, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் நல்லாட்சியில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன.

இத்தகைய திட்டங்களால் பயன்பெற்ற மக்கள் சிவகங்கை மக்களவைத் தொகுதியில் 'இந்தியா' கூட்டணி சாா்பில் போட்டியிட்ட என்னை வெற்றி பெறச் செய்தனா். முதல்வா் ஸ்டாலினுக்கும், கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பனுக்கும், கூட்டணிக் கட்சி நிா்வாகிகளுக்கும், வாக்காளா்களாகிய உங்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், தொகுதிக்குத் தேவையான வளா்ச்சித் திட்டப் பணிகளை நிறைவேற்றுவேன் என தெரிவித்தார்

Tags

Next Story