சிவகங்கை எஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

சிவகங்கை எஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

சிவகங்கை எஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள் 

இளைஞரின் இறப்பிற்கு நீதி கேட்டு சிவகங்கை எஸ்பி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

சிவகங்கை அருகே கீழப்பூங்குடி கிராமத்தை சேர்ந்தவர் அழகர் மகன் அருண்ராஜ்(34). ஓட்டுநராக பணிபுரிந்து வந்த இவர் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கில் தொங்கியபடி மர்மமான முறையில் இறந்துள்ளார்.

இவருக்கும் இதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் கோயிலில் வழிபாடு செய்வது தொடர்பாக ஏற்கனவே பிரச்னை இருந்ததாக கூறப்படுகிறது. இதில் போலீசார் அருண்ராஜை கைது செய்தனர். ஜாமீனில் வெளியே வந்த இவர் இறந்துள்ளார்.

அருண்ராஜ் உடலை கைப்பற்றிய போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் அருண்ராஜ் இறப்பிற்கு காரணமான நபரை கைது செய்யக் கோரி சிவகங்கை எஸ்பி அலுவலகத்தை இவரது உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர்.

வாயிலை மறித்து தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அவர்களிடம் ஏடிஎஸ்பி காட்வின் ஜெகதீஸ்குமார் பேசியதையடுத்து கலைந்து சென்றனர். பின்னர் மீண்டும் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். இதையடுத்து அவர்களை தடுத்த போலீசார் அனைவரையும் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story