சிவகங்கையில் உதவி தலைமை ஆசிரியரிடம் செயின் பறிப்பு

சிவகங்கையில் உதவி தலைமை ஆசிரியரிடம் செயின் பறிப்பு

காவல் நிலையம்


சிவகங்கையில் உதவி தலைமை ஆசிரியரிடம் கத்தியை காட்டி செயின் பறித்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சிவகங்கை சோலைநகர் பகுதியை சேர்ந்தவர் சங்கரபாண்டியன் மகன் பாலமுருகன். இவர் தனியார் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் இன்று காலை சிவகங்கை ரயில்வே நிலையத்தில் நடைப்பயிற்சி முடித்து தனது இரு சக்கர வாகனத்தை எடுக்கச் சென்றபோது, அடையாளம் தெரிந்த மூன்று நபர்கள் இருசக்கரான வாகனத்தில் வந்து கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 1.1/2 பவுன் தங்க செயின், கையில் இருந்த 1.1/2 பவுன் தங்க மோதிரம் 2, வெள்ளி கை செயின் 1 ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றதாக கூறப்படும் நிலையில் சிவகங்கை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story