சிவகங்கை மாவட்டத்தில் நாளை தேசிய மக்கள் நீதிமன்றம் - சட்டப்பணிகள் ஆணைக்குழு தகவல்

சிவகங்கை மாவட்டத்தில் நாளை தேசிய மக்கள் நீதிமன்றம் - சட்டப்பணிகள் ஆணைக்குழு தகவல்

நீதிமன்றம்

சிவகங்கை மாவட்டத்தில் நாளை தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளதாக சட்டப்பணிகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சிவகங்கை மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் நாளை டிசம்பர் 9 காலை 10:00 மணிக்கு நடைபெற உள்ளது. சிவகங்கை மாவட்ட நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளை விரைந்து முடிப்பதற்கு வசதியாக தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு உத்தரவுப்படி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது.

10 அமர்வுகளில் நீதிபதிகள் வழக்கறிஞர்கள் உதவியுடன் வழக்குகளில் சமரச முடிவுக்கான முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளன. சிவகங்கை நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளில் 1170 வழக்குகள் தீர்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. வங்கி கடன் நிலுவை சம்மந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்குகளில் 550 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மக்கள் நீதிமன்றத்தில் மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், உரிமையியல் வழக்குகள், குடும்ப பிரச்னை வழக்கு, தொழிலாளர் பிரச்னை குறித்த வழக்கு, சமரச குற்ற வழக்கு குறித்து தீர்வு கண்டு பயனடையலாம்.தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காணப்படும் வழக்குகளுக்கு மேல் யாதொரு மேல் முறையீடும் செய்ய இயலாது. அதே போல் தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காணப்படும் வழக்குகளுக்கான நீதிமன்ற கட்டணத்தை வழக்கின் தரப்பினர்கள் முழுவதும் திரும்ப பெற்றுக்கொள்ளலாம். வழக்கின் தரப்பினர்கள் நீதிமன்றங்களுக்கு வருவதால் ஏற்படும் கால விரயத்தையும் பணச்செலவையும் தவிர்க்கலாம் இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பொதுமக்கள் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள தங்கள் வழக்குகளை விரைவாகவும் சுமூகமாகவும் சமரச முறையில் தீர்வு கண்டு பயன்பெறுமாறு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் குருமூர்த்தி தெரிவித்தார்.

Tags

Next Story