காளையார்கோவில் : மாமியாரைக் கொன்ற மருமகன் கைது

காளையார்கோவில் : மாமியாரைக் கொன்ற மருமகன் கைது

மாமியாரை கொலை செய்த மருமகன் கைது

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே குடும்பப் பிரச்சினையில் மாமியாரை கத்தியால் குத்திக்கொலை செய்த மருமகனை போலீசார் கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் கஸ்தூரிபாய் தெருவை சேர்ந்தவர்கள் சரவணன், மகாதேவி தம்பதி. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் கடைசி பெண்ணான ஆர்த்தியை அழகாபுரி கிராமத்தில் வசித்துவரும் பிரபு என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்து, அவர்களுககு இரண்டு வயதில் ஆண் குழந்தை இருக்கும் நிலையில், கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தீபாவளி பண்டிகைக்கு முன்னர் தன் தாய் வீட்டிற்கு செல்வதாக கூறி சென்ற ஆர்த்தி, இதுவரை வீடு திரும்பாததால் அவரை அழைத்துவர கணவன் பிரபு இன்று காலை மாமியார் மகா தேவி வீட்டிற்கு சென்று மனைவியை அழைக்கவே மனைவி ஆர்த்தி வரமறுத்ததாகத் தெரகிறது. இதனால் ஆத்திரமடைந்த பிரபு தனது மனைவி தன்னுடன் வராததற்கு காரணம் தனது மாமியார் மகாதேவிதான் என நினைத்து, தான் வைத்திருந்த கத்தியால் அவரை சராமாரியாக குத்தியதில் மாமியார் மகாதேவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, பிரபு காவல் நிலையத்தில் சரணடைந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மகாதேவியின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story