காரை ஏற்றி வாலிபரை கொல்ல முயற்சி - போலீசார் விசாரணை

காரை ஏற்றி வாலிபரை கொல்ல முயற்சி - போலீசார் விசாரணை
காவல் நிலையம் 
சிவகாசி அருகே தொழில்போட்டி காரணமாக காரை ஏற்றி வாலிபரை கொல்ல முயற்சித்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி காமராஜர் சாலையை சேர்ந்தவர் ஜெயராமன் மகன் ஆனந்த் (26). இவர் செப்டிக்டேங் சுத்தம் செய்யும் தொழில் செய்து வருகிறார். இவருக்கும் இவரது உறவினர் குருமூர்த்தி (21) என்பவருக்கும் ஆர்டர் எடுப்பதில் தொழில்போட்டி இருந்து வந்துள்ளது.சம்பவத்தன்று ஆனந்த் தனது மோட்டார் சைக்களில் சிவகாசி -சாட்சியாபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக காரில் வந்த குருமூர்த்தி,ஆனந்திடம் தகராறு செய்துள்ளார்.

பின்னர் அவரை காரை ஏற்றி கொலை செய்து விடுவதாக மிரட்டி ஆனந்த் டூவீலர் மீதும் மோதியுள்ளார். இதில் அவருக்கு காலில் எலும்புமுறிவு ஏற்பட்டது.இது குறித்து சிவகாசி நகர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story