சிவகாசியில் சித்திரை திருவிழா

சிவகாசி பத்திரகாளி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழாவின் 5ஆம் நாளான இன்று அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. சித்திரை திருவிழாவின் 5ம் நாள் திருவிழாவை முன்னிட்டு, சிவகாசி இந்து நாடார்கள் ஜவுளி வர்த்தகர்கள் மகமைப்பண்டுக்கு சொந்தமான மண்டகப்படி மண்டபத்தில் ஸ்ரீபத்திரகாளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.

இன்று அதிகாலை, ஸ்ரீபத்திரகாளியம்மன் 'சிங்க' வாகனத்தில் எழுந்தருளி, நான்கு ரத வீதிகளில் வலம் வந்து, சூரசம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஸ்ரீபத்திரகாளியம்மன் கடைக்கோவிலுக்கு வருகை தந்து, வெள்ளி ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். சித்திரை திருவிழாவின் 5ம் திருவிழாவை முன்னிட்டு, சிவகாசி நகரின் முக்கிய இடங்களில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் இன்னிசை கச்சேரி நடைபெற்றது.

Tags

Read MoreRead Less
Next Story