சிவகாசி சித்திரை திருவிழா 4ஆம் நாள் திருவிழா

சிவகாசி சித்திரை திருவிழா 4ஆம் நாள் திருவிழா
சித்திரை திருவிழா 
சிவகாசி சித்திரை திருவிழா 4ஆம் நாள் திருவிழாவில் வேதாள வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது.

சிவகாசி, ஸ்ரீபத்திரகாளியம்மன் 'வேதாள' வாகனத்தில் எழுந்தருளினார்..... விருதுநகர் மாவட்டம், சிவகாசியில்,இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப் பண்டுக்கு சொந்தமான ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

சித்திரை திருவிழாவின் 4ம் நாள் திருவிழாவை முன்னிட்டு, ஸ்ரீபத்திரகாளியம்மன் சிறப்பு அலங்காரத்தில், கடைக்கோவிலில் வெள்ளி ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். தொடர்ந்து இரவு,ஸ்ரீபத்திரகாளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் 'வேதாள' வாகனத்தில் எழுந்தருளி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.

நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை,சிவகாசி இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டு தேவஸ்தான நிர்வாகிகள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story