சிவகாசி: கொள்ளையர்களை விரட்டிய மக்கள்

சிவகாசி: கொள்ளையர்களை விரட்டிய மக்கள்
சிவகாசியில் கொள்ளை
சிவகாசியில் வெடிவிபத்து நடந்த பட்டாசு ஆலையில் கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை பொதுமக்கள் விரட்டி அடித்தனர்.

.விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள செங்கமலபட்டியில் சரவணன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் கடந்த 9ஆம் தேதி பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.

இதில் 10 பேர் உயிரிழந்தனர். இந்த வெடி விபத்து குறித்து உரிமையாளர் சரவணன்,ஆலையை குத்தகைக்கு நடத்தி வந்த முத்துகிருஷ்ணன்,போர்மேன் சுரேஷ் ஆகியோர் கைது செய்த, நிலையில் நள்ளிரவு இந்த பட்டாசு ஆலைக்கு மர்ம நபர்கள் டூவீலர்கள் மற்றும் லோடு ஆட்டோவில் வந்து சென்றதை பார்த்து சந்தேகம் அடைந்த கிராமமக்கள் பட்டாசு ஆலை இருக்கும் பகுதிக்கு திரண்ட போது பட்டாசு ஆலையில் இருந்த லட்சக்கணக்கான மதிப்புள்ள பேன்சிரக பட்டாசுகளை கொள்ளையடிக்க வந்த மர்ம கும்பல் என தெரிந்தன.

இது குறித்து கிராம மக்கள் போலீசிற்கு தகவல் தெரிவித்துவிட்டு கொள்ளையர்களை விரட்டினர். இதனை கண்ட கொள்ளையர்கள் தாங்கள் வந்த டூவீலர்கள்,லோடு ஆட்டோ ஆகிவற்றை விட்டுவிட்டு தப்பி ஓடினர்.சம்பவ இடத்திற்கு சிவகாசி கிழக்கு போலீசார் விரைந்து வந்தனர். கொள்ளையர்கள் விட்டுசென்ற டூவீலர்கள்,லோடு ஆட்டோவை போலீசாரிடம் கிராம மக்கள் ஒப்படைத்தனா். கொள்ளையடிக்க முயன்ற நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்

Tags

Next Story