சிவகாசி : 16 புதிய திமுக உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை விநியோகம்

சிவகாசி : 16 புதிய திமுக உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை விநியோகம்

உறுப்பினர் அடையாள அட்டை விநியோகம் 

சிவகாசி மாநகரப் பகுதியில் புதிதாக திமுகவில் இணைந்த 16 ஆயிரம் உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டை விநியோகிக்கும் பணி துவங்கியது.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன.இவை 6 பகுதிகளாக பிரிக்கப்பட்டு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு புதிய உறுப்பினர்கள சேர்க்கும் பணி சிவகாசி மாநகர திமுக சார்பாக நடைபெற்றது.மாநகரச் செயலாளர் எஸ்.ஏ.உதயசூரியன் தொடங்கி வைத்தார். தங்களை உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ள ஏராளமான பொது மக்கள் மனு கொடுத்தனர்.

பகுதி கழக செயலாளர் வட்ட கழக செயலாளர் மற்றும் திமுக நிர்வாகிகள் புதிய நிர்வாகிகள் சேர்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.இந்நிலையில் புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை தயார் செய்யப்பட்டு சென்னையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டன.சிவகாசி மாநகர பகுதியில் புதிதாக சேர்க்கப்பட்ட 16 ஆயிரம் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டையை பகுதி கழகச் செயலாளர்களிடம் மாநகர செயலாளர் உதயசூரியன் வழங்கினார்.

இதனை பெற்றுக் கொண்ட நிர்வாகிகளிடம் ஒரு வாரத்திற்குள் சம்பந்தப்பட்ட உறுப்பினர்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.நிகழ்ச்சியில் மாநகர பகுதி கழக செயலாளர்கள் அ.செல்வம், ஞானசேகரன,மாவட்ட பிரதிநிதி ராஜேஷ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story