சிவகாசி : பட்டாசு கழிவில் வெடிவிபத்து - தொழிலாளி காயம்

சிவகாசி : பட்டாசு கழிவில் வெடிவிபத்து - தொழிலாளி காயம்

வனராஜ் 

சிவகாசி அருகே தரைப்பாலத்தின் அருகே கொட்டப்பட்ட பட்டாசு கழிவில் ஏற்பட்ட வெடி விபத்தில் காயமடைந்த தொழிலாளி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிவகாசி அருகே திருத்தங்கல் சத்யா நகர் பகுதியை ஜெயராமன்,இவரது மகன் வனராஜ் .இவர் சிவகாசி அருகே ராமலிங்கபுரத்தில் இயங்கி வரும் பட்டாசு ஆலையில் நேற்று மாலையில் பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பு ம் போது பெத்துலுப்பட்டியிலுள்ள தரைப்பாலம் அருகே இயற்கை உபாதைக்காக ஒதுக்கும் போது அருகில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலையிலிருந்து பட்டாசு கழிவு கொட்டப்பட்டு இருந்த நிலையில் திடீரென வெடித்து சிதறிய சம்பத்தில் வனராஜ் பலத்த காயமடைந்தார்.

மேலும் 50 சதவீத தீ காயமடைந்த வனராஜை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனை தீக்காய சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இந்த விபத்து குறித்து சிவகாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டன, சம்பவ தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.இந்த விபத்தில் இருசக்கர வாகனம் முற்றிலும் தீயில் எரிந்து கருகின. இச்சம்பவம் குறித்து வச்சக்காரப் பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story