சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து - டிஐஜி ரம்யா பாரதி ஆய்வு

சிவகாசியில் வெடி விபத்து நடந்த பட்டாசு ஆலையில் டிஐஜி ரம்யா பாரதி தலைமையில் போலீசார் ஆய்வு செய்தனர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டியில் சரவணக்குமார் என்பவருக்கு சொந்தமான சுதர்சன் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 10 பேர் பலி மற்றும் 13 பேர் காயமடைந்த நிலையில்,பட்டாசு ஆலையில் விபத்து நடந்த இடத்தை மதுரை மண்டல சரக காவல்துறை துணைத் தலைவர் ரம்யாபாரதி மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் பொராஸ்கான்அப்துல்லா, விருதுநகர் ADSP பவித்ரா, சிவகாசி DSP சுப்பையா ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு விபத்து குறித்து ஆய்வு செய்தனர்.

Tags

Next Story