சிவகாசி : வட்டி கேட்டு மிரட்டல் - மூமுக நிர்வாகி உட்பட 2 பேர் கைது

சிவகாசி : வட்டி கேட்டு மிரட்டல் -  மூமுக நிர்வாகி உட்பட 2 பேர் கைது

 ஈஸ்வரபாண்டி (எ) முனீஸ்வரன்

சிவகாசி அருகே வட்டி பணம் கேட்டு பெண்களை மிரட்டிய மூமுக மாவட்ட செயலாளர் உட்பட பேரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கல் பாண்டியன் நகரை சேர்ந்தவர் பட்டாசு ஆலை தொழிலாளி தீபாலட்சுமி,இவரது தங்கை சண்முகப்ரியா,அதே பகுதியில் வசித்து வரும் லட்சுமி ஆகிய 3 பேரும் திருத்தங்கல் முத்துமாரி நகரை சேர்ந்த ஈஸ்வரபாண்டி என்கிற முனீஸ்வரன் என்பவரிடம் தலா ரூ.10 ஆயிரம் வார வட்டிக்கு வாங்கி உள்ளனர். மேலும் அதே பகுதியில் வசித்து வரும் குமார் மனைவி வைரமணி என்பவரிடம் தீபாலட்சுமி ரூ10 ஆயிரமும் அவரது தங்கை சண்முகப்ரியா ரூ.30 ஆயிரமும்,லட்சுமி ரூ.5 ஆயிரமும் வட்டிக்கு பணம் வாங்கியதாக கூறப்படுகிறது.

கடந்த சில வாரங்களாக பட்டாசு ஆலை வேலை இல்லாத நிலையில் வட்டி பணத்தை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இந்நிலையில் சம்பவத்தன்று தீபாலட்சுமி வீட்டிற்கு வந்த ஈஸ்வரபாண்டியன்,வைரமணி ஆகியோர் வட்டிக்கு பணம் பெற்ற சண்முகப்ரியா,லட்சுமி ஆகியோரிடம் உடனே வட்டியுடன் சேர்த்து பணத்தை கேட்டு, குடும்பத்துடன் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது.

இது குறித்து தீபலட்சுமி திருத்தங்கல் போலீசில் புகார் கொடுத்தார்.புகாரின் பேரில் போலீசார் ஈஸ்வரபாண்டி,வைரமணி ஆகியோரை கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட ஈஸ்வரபாண்டி மூவேந்தர் முன்னேற்ற கழகத்தின் விருதுநகர் மாவட்ட கழக செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

Tags

Next Story