சிவகாசி : கொலை வழக்கில் வாலிபருக்கு ஆயுள்தண்டனை

சிவகாசி : கொலை வழக்கில் வாலிபருக்கு ஆயுள்தண்டனை
பைல் படம் 
இளம்பெண்ணை கொலை செய்த வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.
விருதுநகர் மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ளது ஏ.லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் குமார் வயது 28 இவர் முன் விரோதம் காரணமாக அதை பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரி வயது 32 என்பவரை கடந்த 2017 ஆம் ஆண்டு சராசரியாக தாக்கி கழுத்தை நெரித்து கொலை செய்து அருகில் இருந்த கிணற்றில் தூக்கி போட்டு விட்டு சென்று விட்டார்.இது தொடர்பாக உறவினர் கொடுத்த புகார் அடிப்படையில் ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து குமாரை கைது செய்தனர்.இந்த கொலை தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரரில் உள்ள மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி பகவதியம்மாள் குமாருக்கு ஆயுள் தண்டனையும் 13,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டார்.

Tags

Next Story