சிவகாசி : ரம்ஜான் பண்டிகையில் மேயர் பங்கேற்பு

சிவகாசி பெரியபள்ளி வாசலில் நடந்த ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகையில் மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் கலந்து கொண்டார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில், இஸ்லாமியர்களின் மிகப் பெரும் பண்டிகையான ரம்ஜான் பண்டிகை இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. பெரியபள்ளி வாசலில் நடைபெற்ற ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம் மற்றும் சிறப்பு தொழுகையில், மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் கலந்து கொண்டார். பள்ளி வாசலில் இருந்த இஸ்லாமிய மக்களுக்கு மேயர் சங்கீதா இன்பம், இனிப்புகள் வழங்கி ரம்ஜான் பண்டிகை வாழ்த்துகளை கூறினார். பள்ளி வாசல் பகுதியில் திரண்டு நின்ற பொது மக்களிடம்,காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம்தாகூருக்கு கை சின்னத்தில் வாக்களிக்குமாறு மேயர் பேசினார்.உடன்,சிவகாசி எம்எல்ஏ அசோகன்,துணை மேயர் விக்னேஷ்பிரியா திமுக நிர்வாகிகள் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் இருந்தனர்.

Tags

Next Story