சிவகாசி : பக்ரீத் சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்

சிவகாசி :  பக்ரீத் சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்

பக்ரீத் சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் 

சிவகாசியில் தமுமுக சார்பில் நடந்த பக்ரீத் சிறப்பு தொழுகையில் திரளான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகர தமுமுக சார்பாக பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை மீரா உசேன் தெருவில் வைத்து நடைபெற்றது.இஸ்லாமிய அழைப்பாளர் அப்துல் காதர் உஸ்மானி சிறப்பு தொழுகையை நடத்திவைத்து,குத்பா பேருரை நிகழ்த்தினார். தமுமுக மாநில செயலாளர் சிவகாசி முஸ்தபா மமக மாவட்ட செயலாளர், முஹம்மது இஸ்மாயில், அப்துல்லா,இபுசலீம்,ஹக்கீம், கபார்,சர்மத்கான்,ராஜா உசேன் உள்ளிட்ட நிர்வாகிகளும், ஜமாத்தார்களும்,ஆண்களும் பெண்களும் திரளாக கலந்து கொண்டனர்.தொழுகையின் முடிவில் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தொழுகைக்கான ஏற்பாடுகளை மாநகர தமுமுக நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags

Next Story