சிவகாசி:பங்குனி பொங்கல் 8 ஆம் திருவிழா

சிவகாசி:பங்குனி பொங்கல் 8 ஆம் திருவிழா

பவணி ஊர்வலம்

சிவகாசி அருகே திருத்தங்கல் அருள்மிகு மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் 8 ஆம் திருவிழா,பல்லாக்கு குதிரையில் அம்மன் பவணி ஊர்வலம்..
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல்லில்,இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான,அருள்மிகு மாரியம்மன் கோவிலின் 77ம் ஆண்டு பங்குனி பொங்கலின் 8ஆம் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக,மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.வாண வேடிக்கை மற்றும் மேள, தாளங்கள் முழங்க சிறப்பு அலங்காரத்தில் பல்லாக்கு குதிரையில் எழுந்தருளி மாரியம்மனுக்கு வீதி உலா நடைப்பெற்றன.பின்னர் சிறப்பு பூஜைகள் மற்றும் அர்ச்சனைகள் நடைபெற்றன.சிறப்பு பூஜைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். பங்குனி பொங்கல் திருவிழாவில், நாளை 9ம் தேதி (செவ்வாய் கிழமை) காலை பால்குடம் செலுத்தும் நிகழ்ச்சியும், இரவு முளைப்பாரி நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. வரும் 11ம் தேதி (வியாழன் கிழமை) காலை, பொங்கல் விழா தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருவிழா நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரிகள், நிர்வாகிகள் மற்றும் நிகழ்ச்சி உபயதாரர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

Tags

Next Story