சிவகாசி பங்குனி பொங்கல் தேரோட்ட திருவிழா

சிவகாசி பங்குனி பொங்கல் தேரோட்ட திருவிழா

சிவகாசி பங்குனி பொங்கல் தேரோட்ட திருவிழாவில் கலந்து கொண்டு பொதுமக்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.


சிவகாசி பங்குனி பொங்கல் தேரோட்ட திருவிழாவில் கலந்து கொண்டு பொதுமக்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

சிவகாசி, மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா தேரோட்டம் நடந்ததில் பக்தர்கள் உற்சாகமாக பங்கேற்றனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசியில், இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டுக்கு சொந்தமான ஸ்ரீமாரியம்மன் கோவிலில், பங்குனி பொங்கல் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. முன்னதாக, விநாயகர் எழுந்தருளிய சின்னத்தேர் நான்கு ரத வீதிகளில் வலம் வந்து நிலைக்கு வந்து சேர்ந்தது. இதனையடுத்து, ஸ்ரீமாரியம்மன் எழுந்தருளிய பெரிய தேரை, ஏாளமான பக்தர்கள் வடம் பிடித்து உற்சாகமாக இழுத்தனர்.தேரோட்ட திருவிழா ஏற்பாடுகளை, சிவகாசி இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டு தேவஸ்தான நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags

Next Story