சிவகாசியில், 'சிம்ம' வாகனத்தில் எழுந்தருளிய மாரியம்மன்...

சிவகாசி பங்குனி பொங்கல் 5 ஆம் திருவிழா.சிம்ம வாகனத்தில் அம்மன் வீதி உலா...
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில், இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டுக்கு சொந்தமான மாரியம்மன் கோவில், பங்குனி பொங்கல் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. பங்குனி பொங்கல் 5ம் நாள் திருவிழாவை முன்னிட்டு, மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதனையடுத்து,மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் 'சிம்ம' வாகனத்தில் எழுந்தருளி நான்கு ரத வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.அம்மன் வீதியுலா நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை,சிவகாசி இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டு தேவஸ்தான நிர்வாகிகள் மற்றும் நிகழ்ச்சி உபயதாரர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags

Next Story