சிவகாசி பங்குனி பொங்கல் திருவிழா

சிவகாசி அருகே திருத்தங்கல் அருள்மிகு மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா, பறவை காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்...
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல்லில், இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான, அருள்மிகு ஸ்ரீமாரியம்மன் கோவிலின் பங்குனி பொங்கல் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றன. இதில் பொங்கல் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான, பறவை காவடி, அக்கினிசட்டி திருவிழா நடைபெற்று வருகிறது. திருத்தங்கல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் அக்கினிசட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். மேலும் திருத்தங்கல் பகுதியை 10க்கு மேற்பட்ட பக்தர்கள் மேளம், தாளம் முழங்க பக்தர்கள் புடைசூழ பறவை காவடி எடுத்து தங்களுது நேர்த்திக்கடனை செலுத்தினர். முன்னதாக, மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் சிறப்பு பூஜைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பறவை காவடியை காண திருத்தங்கல் மற்றும் சுற்று பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். திருவிழா நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரிகள், நிர்வாகிகள் மற்றும் நிகழ்ச்சி உபயதாரர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்

Tags

Next Story