சிவகாசி : தீ விபத்தில் வாலிபர் உயிரிழப்பு

சிவகாசி : தீ விபத்தில் வாலிபர் உயிரிழப்பு
காவல் நிலையம் 
சிவகாசி அருகே விவசாய கழிவுகளை எரித்த போது ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விருதுநகர் மாவட்டம்,சிவகாசி அருகே எரிச்சநத்தம் அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் முருகன் மகன் சரவணக்குமார். இவர் அதே பகுதியில் விவசாய நிலங்களில் வேலை செய்து வந்துள்ளார்.சம்பவத்தன்று எரிச்சநத்தத்தில் உள்ள தனது உறவினர் விவசாய நிலத்தில் மக்காச்சோள கழிவுகளை எரித்ததாக கூறப்படுகிறது.

கழிவுகள் சரியாக எரியாததால் தனது டூவீலரில் இருந்து பெட்ரோலை எடுத்து கழிவுகளின் மீது ஊற்றி போது எதிர்பாராத விதமாக தீ வாலிபர் சரவணக்குமார் மீது பரவியது. இதில் நிலை தடுமாறிய சரவணக்குமார் தனது கையில் வைத்திருந்த பெட்ரோலை தன் மீதே ஊற்றிக்கொண்டதாக கூறப்படுகிறது.இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவர் அருகில் இருந்த கிணற்றில் குதித்து தீயை அணைத்துள்ளார்.

தொடர்ந்து சம்பவ இடத்தில் இருந்து எரிச்சநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று முதலுதவி பெற்றுவிட்டு மேல் சிகிச்சைக்காக தீக்காயம் அதிக அளவில் இருந்ததால் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்தவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவம் குறித்து எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Next Story