திருவைகாவூர் வில்வவனேஸ்வரர் கோவிலில் சிவராத்திரி விழா

திருவைகாவூர் வில்வவனேஸ்வரர் கோவிலில் சிவராத்திரி விழா

சிவராத்திரி 

சிவராத்திரி தோன்றிய தலமான திருவைகாவூர் வில்வனேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற சிவராத்திரி பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா திருவைகாவூர் வில்வனேஸ்வரர் கோவில் சிவராத்திரி தோன்றிய தலமாகும். இக்கோவிலில் மகாசிவராத்திரியை முன்னிட்டு சுவாமிக்கு விடிய விடிய 4 கால பூஜை நடந்தது. உள்ளூர் மற்றும் வெளியூரிலிருந்து பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமியை தரிசித்து வழிபட்டனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் செயல் அலுவலர் சக்திவேல், ஆய்வாளர் லட்சுமி, கணக்கர் கோபாலகிருஷ்ணன், மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags

Next Story