சிவசுப்பிரமணியசுவாமி கோவில் பங்குனி உத்திர தேர்திருவிழா கொண்டாட்டம்

அன்னசாகரம் சிவசுப்பிரமணியசுவாமி கோவில் பங்குனி உத்திர தேர்திருவிழா ஏராளமான பெண்கள் தேரை வடம் பிடித்து இலுத்தனர்.
தருமபுரி அன்னசாகரம் முருகன் கோவில் பங்குனி உத்திர தேர் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முக்கிய நாளான இன்று அலங்கரிக்கப்பட்ட தேரில் முருகன் வள்ளிதெய்வானை பக்தர்களுக்கு காட்சி தந்தார் ஆயித்திற்கும் மேற்பட்ட பெண்கள் அரோகரா கோஷமிட்டவாரு தேரை வடம்பிடித்து இலுத்தனர். பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் தேரின் மீது உப்பு, மிளகு தூவி சுப்பிரமணியசுவாமியை வணங்கி வழிபட்டனர். இத்தேர் திருவிழாவிற்கு வந்த அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags

Next Story