காணியாளம்பட்டியில் வெறி நாய்கள் அட்டகாசம்- 6 ஆடுகள் உயிரிழப்பு

காணியாளம்பட்டியில்  வெறி நாய்கள் அட்டகாசம்- 6 ஆடுகள் உயிரிழப்பு

வெறிநாய்கள் கடித்ததில் ஆறு ஆடுகள் பலி

காணியாளம்பட்டியில் ஆடுகளை வெறி நாய்கள் கடித்து குதறியதால் 6ஆடுகள் உயிரிழந்ததை அடுத்து, வெறிநாய்களை கட்டுபடுத்த புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டினர்
கரூர் மாவட்டம் காணியாளம்பட்டி பகுதியில் ராமலிங்கம் என்பவர் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த வெறி நாய்கள் 6- ஆடுகளை கடித்து குதறியதில் சம்பவ இடத்திலே 1 குட்டி உட்பட 6 ஆடுகள் உயிரிழந்தது. இதனால்,ஆத்திரமடைந்த அப்பகுதி விவசாய பொதுமக்கள், கரூர்- தரகம்பட்டி சாலையில் காணியாலம்பட்டி அருகே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பல மாதங்களாக மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், வெறி நாய்கள் தொல்லையால் ஆடுகள் உயிரிழப்பு தொடர்வதால் எங்கள் உழைப்பு வீணாகி வருகிறது என கூறி ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவம் அறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த மாயனூர் காவல்துறையினர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 15 நாட்களுக்குள் வெறிநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

Tags

Next Story