ஆதிதிராவிட சமுதாய மீனவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்

ஆதிதிராவிட சமுதாய மீனவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்
ஆதிதிராவிட சமுதாய மீனவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்
செங்கல்பட்டு மாவட்டம்,திருப்போரூர் அடுத்த குன்றுக்காடு மீனவ கிராமத்தில், ஆதிதிராவிட சமுதாய மீனவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடந்தது.

செங்கல்பட்டு மாவட்டம்,திருப்போரூர் அடுத்த குன்றுக்காடு மீனவ கிராமத்தில், மத்திய அரசின் கீழ் இயங்கும் கடல் பொருள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் சார்பில், ஆதிதிராவிட சமுதாய மீனவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடந்தது. இதில், கடல் பொருள் ஏற்றுமதி கழகத்தின் துணை இயக்குனர் சஜினா தலைமை வகித்தார்.

தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் அருள்மூர்த்தி, நெட்பிஷ் மற்றும் மீன்வளத் துறை மாவட்ட திட்ட மேலாளர் டாக்டர் செந்தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தனர். பயிற்சியின் போது, கடல் மீன்களை பாதுகாக்கும் முறை, மீன்களை சேதப்படுத்தாமல் பாதுகாப்பாக கையாளும் முறை, மீன்களை தரம் பிரிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது

Tags

Next Story