மழையால் மந்தமான தர்பூசணி விற்பனை

மழையால் மந்தமான தர்பூசணி விற்பனை

 கோடை மழை பெய்து வரும் நிலையில், திருவேங்கடம் சுற்றியுள்ள பகுதிகளில் தர்பூசணி விற்பனை குறையத்துவங்கியதால் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.

கோடை மழை பெய்து வரும் நிலையில், திருவேங்கடம் சுற்றியுள்ள பகுதிகளில் தர்பூசணி விற்பனை குறையத்துவங்கியதால் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் கடந்த வாரம் வரை கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதே போன்று தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் திருவேங்கடம் பகுதிகளில் வெயிலின் தாக்கத்தால் தர்பூசணி பழ வியாபாரம் அமோகமாக வியாபாரங்கள் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று காலை மற்றும் மாலை முதல் இதமான சாரல் மழை பெய்ததால் தர்பூசணி பழ வியாபாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டதால் வியாபாரிகள் வேதனை. இதனால் தர்ப்பூசணி பழம் மழையில் கிடந்தால் அனைத்து பழங்களும் அழுகி போகிவிடும் என வியாபாரிகள் வருத்தத்துடன் தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story