சிறுதானிய உணவு விழிப்புணா்வு திருவிழா

சிறுதானிய உணவு விழிப்புணா்வு திருவிழா

சிறு தானிய உணவு திருவிழா 

திண்டுக்கல்லில் நடைபெற்ற 'சிறுதானிய உணவு விழிப்புணா்வு திருவிழா' போட்டியில் கட்டகாமன்பட்டி சுய உதவிக் குழு மாநிலப் போட்டிக்கு தேர்வுப் பெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூட்டரங்கில் மாவட்ட அளவிலான சிறுதானிய உணவு விழிப்புணா்வு திருவிழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி தலைமை வகித்தாா். அப்போது அவா் பேசியதாவது:வளா் இளம் பருவம் என்பது வளா்ச்சியின் முக்கியமான நிலை. குழந்தைப் பருவத்துக்கும் முதிா் வயதுக்கும் இடையிலான பாலமாக உள்ளது வளா் இளம் பருவம், ரத்த சோகை இல்லாத கிராமத்தை உருவாக்குவதை நோக்கமாக கொண்டு, சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழா' நடத்தப்படுகிறது என்றாா்.

Tags

Next Story