திருவாரூர் மாவட்டத்தில் டிச., 4 ல் சிறுதானிய உணவு திருவிழா

திருவாரூர் மாவட்டத்தில்  டிச., 4 ல்  சிறுதானிய உணவு திருவிழா

சிறுதானிய உணவு திருவிழா

திருவாரூர் மாவட்டத்தில் எதிர்வரும் டிசம்பர் நான்காம் தேதி காலை 10 மணிக்கு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கில் சிறுதானிய உணவு திருவிழா மற்றும் கண்காட்சி நடைபெற உள்ளது. கண்காட்சியில் சிறுதானிய உணவின் நன்மைகள், பயன்கள் குறித்த விவரங்களுடன் சிறுதானிய உணவுகளை சிறப்பாக தயார் செய்து உரிய குறிப்புகளுடன் பொதுமக்கள் ஆகிய நுகர்வோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரசு துறைகள், சுய உதவிக் குழுக்கள், தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் மற்றும் பள்ளிகள் ,கல்லூரிகளில் செயல்படும் குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள் ஆகிய அமைப்புகளால் காட்சிப்படுத்தப்பட உள்ளது மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தகவல் தெரிவித்தார்.

Tags

Next Story