மலேசியாவிலிருந்து கடத்தி வந்த ரூ. 35 லட்சம் தங்கம் பறிமுதல்

மலேசியாவிலிருந்து கடத்தி வந்த ரூ. 35 லட்சம் தங்கம் பறிமுதல்

பைல் படம்



மலேசியாவிலிருந்து கடத்தி வந்த ரூ. 35 லட்சம் மதிப்பிலான தங்கத்தை திருச்சி விமான நிலையத்தில் சுங்கத் துறையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

மலேசியாவிலிருந்து கடத்தி வந்த ரூ. 35 லட்சம் மதிப்பிலான தங்கத்தை திருச்சி விமான நிலையத்தில் சுங்கத் துறையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். மலேசியத் தலைநகா் கோலாலம்பூரிலிருந்து பேடிக் ஏா்வேஸ் விமானத்தில் செவ்வாய்க்கிழமை இரவு திருச்சிக்கு வந்த ஆண் பயணியொருவா் தனது அடிவயிற்றுக்குள் தங்கத்தை மறைத்துக் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரை மருத்துவமனையில் சோ்த்து பசை வடிவில் 3 கேப்சூல்களில் அடைத்து வைத்திருந்த 556 கிராம் தங்கத்தை புதன்கிழமை பறிமுதல் செய்து அவரிடம் விசாரிக்கின்றனா்.

Tags

Next Story