வேப்பனப்பள்ளி அருகே மது பாட்டில்களை கடத்தி வந்தவர் கைது

வேப்பனப்பள்ளி அருகே மது பாட்டில்களை கடத்தி வந்தவர் கைது

காவல் நிலையம் 

வேப்பனப்பள்ளி அருகே இருசக்கர வாகனத்தில் மது பாட்டில் கடத்தி வந்தவரை கைது செய்த போலீசார் ரூ.10ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனபள்ளி நகரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்போது வேப்பனப்பள்ளி நோக்கி வந்து கொண்டிருந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி போலீசார் சோதனை செய்தபோது அதில் கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடித்தனர். பின்னர் விசாரனையில் வேப்பனப்பள்ளி கவுண்டர் தெருவை சேர்ந்த வேலன் 35 என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 10000 மதிப்பிலான மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story