பேருந்தில் கஞ்சா கடத்தல்

பேருந்தில் கஞ்சா கடத்தல்

திருப்பூர் டவுன்ஹால் அருகே 500 கிராம் கஞ்சாவுடன் சிறுவன் உட்பட மூன்று பேரை வடக்கு மாநகர போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


திருப்பூர் டவுன்ஹால் அருகே 500 கிராம் கஞ்சாவுடன் சிறுவன் உட்பட மூன்று பேரை வடக்கு மாநகர போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் டவுன்ஹால் அருகே பேருந்தில் கஞ்சா கடத்திய சிறுவன் உட்பட 3 பேர் கைது. திருப்பூர் வடக்கு போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மங்கலத்தில் இருந்து பஸ்சில் கஞ்சா கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவல் அடிப்படையில் வடக்கு போலீசார் திருப்பூர் டவுன்ஹால் பகுதியில் வந்த பஸ் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் சந்தேகத்திற்கிடமான வாலிபர்கள் 3 பேரின் பைகளை சோதனையிட்டனர். அதில் அரசால் தடை செய்யப்பட்ட 500 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து, அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். போலீசார் விசாரணையில் அவர்கள் உத்திர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அஜய் (19), அஜித்குமார் (24) மற்றும் 17 வயது சிறுவர் ஒருவன் என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர் அவர்களிடம் இருந்த 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story