ரயிலில் கஞ்சா கடத்தல் - ஒருவர் கைது

ரயிலில் கஞ்சா கடத்தல் - ஒருவர் கைது

கஞ்சா கடத்தல்

சேலம் ரயில்வே காவல்துறையினர் டாட்டாநகர்- எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலில் நடத்திய சோதனையில் கஞ்சா கடத்தி வந்த இளைஞரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் ரெயில்வே போலீசார் டாட்டாநகர்- எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஜோலார்பேட்டை முதல் சேலம் வரைக்கும் ரெயிலில் சோதனை நடத்தினர், அப்போது எஸ்- 3 பெட்டியில் சந்தேகப்படும்படி இருந்த வாலிபரை பிடித்து அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் 7 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. உடனே போலீசார் கஞ்சா கடத்திய ஷாகீர் சையத் முகமது (25) என்பவரை கைது செய்தனர். இதேபோல் அதே ரெயிலில் கழிப்பறை அருகில் கிடந்த பையில் இருந்த 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்ததுடன் அதனை கடத்தி வந்தவர் குறித்தும் விசாரணை நடத்தினர்.

Tags

Next Story