ரேஷன் அரிசியை கடத்தியவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

ரேஷன் அரிசியை கடத்தியவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
பைல் படம்


சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் ரேஷன் அரிசி கடத்தியதாக கைது செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (வயது 46) என்பவர் ரேஷன் அரிசி கடத்தியதாக கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவர் மீது ஏற்கனவே ரேஷன் அரிசி கடத்தியதாக 2 வழக்குகள் பதிவாகி இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட செந்தில்குமாரை இன்ஸ்பெக்டர் சங்கீதா பரிந்துரையின் பேரில் போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி உத்தரவின் பேரில் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

Tags

Next Story