கோழிக்குஞ்சை விழுங்கிய நல்ல பாம்பு

கோழிக்குஞ்சை விழுங்கிய நல்ல பாம்பு

பாம்பு

சீர்காழி அருகே கோழிக்குஞ்சை விழுங்கிய 5 அடி நீள நல்ல பாம்பு வலையில் சிக்கி தவிப்பு, பிடித்து வனப்பகுதியில் விடப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தாண்டவன்குளம் கிராமத்தை சேர்ந்த சோமு என்பவரின் வீட்டின் பின்புறத்தில் உள்ள கோழிக்கூண்டில் நுழைந்து அதில் இருந்த கோழிக்குஞ்சை விழுங்கி உள்ளது,பின்னர் கோழிக்கூண்டை சுற்றி போடப்பட்ட வலையில் சிக்கி வெளியே செல்ல முடியாமல் சிக்கி தவித்து வந்துள்ளது, இதனையடுத்து பாம்பு பிடிப்பதில் வல்லவரான,சீர்காழி பகுதியைச் சேர்ந்த பாம்பு பாண்டியனை தொடர்பு கொண்டு பாம்பை பிடித்து தருமாறு கேட்டார். இதையடுத்து வீட்டிற்கு வந்த பாம்பு பாண்டியன் ஒரு கம்பியை கொண்டு சுமார் 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பை லாவகமாக பிடித்து பாட்டிலில் அடைத்து சீர்காழி அருகே உள்ள அடர்ந்த காட்டுபகுதியில் பாம்பை விட்டனர்.

Tags

Next Story