காங்கேயம் 1-வது வார்டு நகரில் தொடரும் பாம்புகள் தொல்லை

காங்கேயம் 1-வது வார்டு நகரில் தொடரும் பாம்புகள் தொல்லை
காங்கேயம் நகராட்சிக்கு உட்பட்ட 1வது வார்டு திருவிக நகரில் பாம்புகள் தொல்லை அதிகரித்துள்ளது.

காங்கேயம் நகராட்சிக்கு உட்பட்ட 1வது வார்டு பகுதியான திரு.வி.க நகர் இரண்டாவது வீதியில் தொடரும் பாம்புகள் தொல்லை. அங்குள்ள காலியிடங்கள் மற்றும் முற்புதர்களில் பாம்புகளின் இருப்பிடமாக இருந்து வருகிறது.

கடந்த மூன்று மாதங்களில் 10க்கு மேற்பட்ட பாம்புகளை தீயணைப்பு துறையினர் பிடித்து வனப்பகுதியில் விட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று காலை சரவணன் என்பவரது குடியிருப்பு வீட்டின் தகர ஓட்டின் கூரையில் பாம்பு போன்ற தெரிவதாக வீட்டின் உரிமையாளர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தீயணைப்பு நிலைய அலுவலர் பொறுப்பு ரமேஷ் தலைமையில் வந்த தீயணைப்பு வீரர்கள் வீட்டில் பதுங்கி இருந்த பாம்பை லாபகரமாக பிடித்து வனப்பகுதியில் விட்டனர். பிடிக்கப்பட்ட பாம்பு கட்டுவிரியன் வகையைச் சார்ந்தது என தெரிவித்தனர் சுமார் மூன்று அடி நீளம் கொண்ட பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்டதாக தெரிவித்தனர்.

மேலும் இன்று மாலை நேரத்தில் இதே வகையைச் சார்ந்த பாம்பு ஒன்று மீண்டும் இதே பகுதியில் வந்து கொண்டிருந்தது.இதை பார்த்த பொதுமக்கள் பிடிக்க சென்ற போது பாம்பு புதருக்குள் சென்று விட்டதாகவும் இந்த வீதியில் உள்ள காலியிடங்கள் மற்றும் முட்புதரில் அதிக அளவு பாம்புகள் உள்ளதாகவும் அந்த பாம்புகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என நகராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story