சூளகிரி அருகே ஆடிய சாரை பாம்புகள்: ஆச்சரியத்துடன் பார்த்த மக்கள்

சூளகிரி அருகே ஆடிய சாரை பாம்புகள்: ஆச்சரியத்துடன் பார்த்த மக்கள்

இணைந்து ஆடிய பாம்புகள்

சூளகிரி அருகே 2சாரை பாம்புகள் ஓன்றோடு ஒன்று பிண்ணி பிணைந்து ஆடியதை ஆச்சரியத்துடன் பொதுமக்கள் பார்த்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த வேம்பள்ளி கிராமத்தில் விவசாய நிலத்தின் அருகே உள்ள முட்புதரில் 10 அடி நீளம் கொண்ட 2 சாரை பாம்புகள் ஒன்றோடு ஒன்று இணைந்து பிண்ணி பிணைந்து நடமாடி கொண்டிருந்தது.

அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பாம்புகள் பாம்புகள் நடமாடுவதை கண்டு அப்பகுதியில் சென்ற பொதுமக்கள், விவசாய பணியில் ஈடுபட்டிருந்தவர்களும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

இரண்டு பாம்புகளும் எழுந்து நின்றதை போன்று 5 அடி உயரத்திற்கு பாம்புகள் நீண்டநேரமாக விளையாடியதை பொதுமக்கள் படம் பிடித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Tags

Next Story