பஸ்ஸில் பெண்ணிடம் சில்மிஷம்:  போதை வாலிபர்களுக்கு அடி உதை

பஸ்ஸில்  பெண்ணிடம் சில்மிஷம்:  போதை வாலிபர்களுக்கு அடி உதை
கிரைம் 
நாகர்கோவிலில் பஸ்ஸில் பெண்ணிடம் சில்மிஷம்:  போதை வாலிபர்களுக்கு அடி உதை.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பஸ் நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு திருச்செந்தூருக்கு ஒரு அரசு பஸ் புறப்பட்டது. அப்போது பஸ்ஸில் இரண்டு வாலிபர்கள் மது போதையில் ஏறி உள்ளனர். பஸ் அப்ட்டா மார்க்கெட் பகுதியில் சென்றபோது போதையில் இருந்த இரண்டு வாலிபர்களும் அவர்களது இருக்கைக்கு முன் இருந்த இளம் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டனர். இளம்பெண் இது தொடர்பாக கண்டக்டரிடம் கூறியுள்ளார். அதை தொடர்ந்து பஸ் சாலையோரம் நடத்தப்பட்டது. சில்மிஷத்தில் ஈடுபட்டு இரண்டு பேரையும் பஸ்ஸிலிருந்து இறங்கும் படி கண்டக்டர் கூறினார். ஆனால் அவர்கள் இறங்க மறுத்து தகராறு செய்தனர். டிரைவர் கண்டக்டர் இணைந்து மதுபோதையில் தகராறு செய்த இரண்டு பேரையும் பஸ்ஸிலிருந்து கீழே இறக்க முயன்ற போது, பயங்கர மோதல் ஏற்பட்டது. இதைக்கண்ட சக பயணிகள் அந்த போதை வாலிபர்களை தர்ம அடி கொடுத்து பஸ்ஸிலிருந்து கீழே இறக்கி விட்டனர். இந்த சம்பவம் குறித்து வடசேரி போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வருவதை அறிந்த போதை வாலிபர்கள் அச்சமடைந்து, அங்கிருந்து சென்று விடுவதாக கூறினர். பஸ்ஸில் உள்ள தங்களது உடைமைகளை மட்டும் தாருங்கள் என்று கேட்டனர். ஆனால் இதை கண்டு கொள்ளாமல் பஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.

Tags

Read MoreRead Less
Next Story