மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவு பதிவு பணி தீவிரம்

மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவு பதிவு பணி தீவிரம்

மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவு பதிவு டிசம்பர் மாதம் தொடங்கி தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது

மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவு பதிவு டிசம்பர் மாதம் தொடங்கி தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது
33 மாவட்டங்களில் நவம்பர் 29ஆம் தேதி முதல் சமூகத் தரவு பதிவு கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. கணக்கெடுப்பில் தமிழ்நாடு நகர்புற வாழ்வாதார இயக்க களப்பணியாளர்களும், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன களப்பணியாளர்களும் தகவல் சேகரிக்கும் பணியை மேற்கொள்வார்கள் . கணக்கெடுப்பிற்காக உருவாக்கப்பட்டுள்ள செயலியில் தகவல்கள் பதிவு செய்யப்படும். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள இதுவரை கணக்கெடுப்பில் தங்கள் விவரங்களை பதிவு செய்யாத அனைத்து மாற்றுத்திறனாளிகளும் விடுதல் இன்றி தங்கள் தகவல்களை தங்கள் பகுதியில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கு களப்பணியாளர்களும், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன களப்பணியாளர்கள் மூலம் பதிவு செய்து கொள்ளுமாறும் முழுமையாக தயக்கம் இன்றி வழங்கிடுமாறும் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தகவல் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story