திராவிடர்கழகம்  சார்பாக  சமூகநீதி விழிப்புணர்வு  பிரச்சாரம்.

திராவிடர்கழகம்  சார்பாக  சமூகநீதி விழிப்புணர்வு  பிரச்சாரம்.
நாகர்கோவிலில் திராவிடர் கழக பிரச்சாரம்
பெரியாரின் கொள்ளைகளை மக்களுக்கு எடுத்துரைத்தனர்
கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக திராவிடர் இயக்கத்தின் முக்கிய கொள்கையான அனைவருக்கும் அனைத்து உரிமைகள் கிடைக்க வேண்டும் என்ற தந்தை பெரியார் சமூக நீதி கொள்கை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான பிரச்சாரம் நாகர்கோவில் மாநகர பகுதிகளில் நடந்தது. மாவட்டத் தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் முன்னிலை வகித்தார். கலைவாணர் பேரன் என்.எஸ்.கே.கே. இராஜன், காப்பாளர் ஞா. பிரான்சிஸ், மாவட்ட துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள், இலக்கிய அணி செயலாளர் பா. பொன்னுராசன்; மாணவர் அணி அமைப்பாளர் இரா.கோகுல் தோழர்கள், பெரியார் பற்றாளர்கள் பங்கேற்று பொதுமக்களுக்கு சமூக நீதி குறித்த நூல்களை தூண்டறிக்கைகளை வழங்கினர்.

Tags

Next Story