கீழ்பென்னாத்தூரில் படை வீரர் கொடிநாள் ஊர்வலம்

கீழ்பென்னாத்தூரில் படை வீரர் கொடிநாள் ஊர்வலம்

படை வீரர் கொடிநாள் ஊர்வலம்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட படை வீரர் கொடிநாளை முன்னிட்டு நடந்த ஊர்வலத்திற்கு தாசில்தார் சரளா தலைமை வகித்து கொடியசைத்து அவரும் உடன் சென்றார். ஊர்வலம் தாலுகா அலுவலகத்தில் தொடங்கி முக்கிய சாலைகள் வழியாக சென்று போலீஸ் ஸ்டேஷன் எதிரில் முடிவடைந்தது.ஊர்வலத்தில் படைவீரர்கள் நலனுக்காக வியாபாரிகள்,பொதுமக்கள் ஆகியோர் மாணவர்கள் ஏந்திச் சென்ற உண்டியலில் பணம் செலுத்தினர்.இதில் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் சுகுணா,வட்ட வழங்கல் அலுவலர் ஜான் பாஷா, தலைமையிடத்து துணை தாசில்தார் சீத்தாராமன், மண்டல துணை தாசில்தார் மாலதி மற்றும் வருவாய்ஆய்வாளர்கள்,கிராம நிர்வாக அலுவலர்கள்,ஆசிரியர்கள்,கிராம உதவியாளர்கள்,மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story