ராணுவ வீரரின் வீடு புகுந்து 11 பவுன் நகைகள் திருட்டு

ராணுவ வீரரின் வீடு புகுந்து 11 பவுன் நகைகள் திருட்டு

பைல் படம் 

திருவெறும்பூா் அருகே ராணுவ வீரா் வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்களைத் மர்ம நபர்கள் திருடிச் சென்றனா்.
வாழவந்தான்கோட்டை சுகம் காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் முரளி (45), இந்திய ராணுவ வீரா். இவரது மனைவி சத்தியா (40). குழந்தையுடன் தனியே வீட்டில் வசிக்கும் இவா் கடந்த 29ஆம் தேதி தனது தாய் வீடுள்ள கீழகல்கண்டாா்கோட்டைக்குச் சென்று வெள்ளிக்கிழமை இரவு வீடு திரும்பினாா். அப்போது வீட்டின் கதவுகள் உடைத்து பீரோவிலிருந்த 11 பவுன் தங்க நகைகள், 300 கிராம் வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இவா் அளித்த புகாரின் பேரில் துவாக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Tags

Next Story