வடக்குதோப்பு புளியக்குடியில் பகுதி நேர அங்காடிக்கு தீர்வு

வடக்குதோப்பு புளியக்குடியில் பகுதி நேர அங்காடிக்கு தீர்வு

காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

வடக்குதோப்பு புளியக்குடியில் பகுதி நேர அங்காடி கேட்டு தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் வட்டாட்சியர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் வடக்கு தோப்பு புளியக்குடியில் உள்ள மக்கள் தற்போது உள்ள அங்காடிக்கு ரேஷன் பொருட்களை வாங்க ரயில்வே லைனை கடந்து 3 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று பொருட்கள் வாங்கி வரும் நிலை உள்ளது இருசக்கர வாகனத்தில் சென்றால் 5 கிலோ மீட்டர் தூரம் வரைசென்று ரேஷன் பொருட்கள் வாங்கி வரும் சூழ்நிலை உள்ளது.

உடனடியாக வடக்கு தோப்பு புளியக்குடியில் பகுதி நேர அங்காடி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில்,

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வடக்கு தோப்பு புளியக்குடியில் பகுதி நேர அங்காடி அமைப்பதற்கான கட்டடம் தேவை என்று சொன்ன அடிப்படையில் பொதுமக்களால் நன்கொடைகள் வசூலிக்கப்பட்டு அங்காடி அமைப்பதற்கான கட்டடமும் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் தற்போது அதிகாரிகள் காலம் தாழ்த்தி பொதுமக்களை அலைக்கழித்து வரும் நிலையில் உடன் பகுதி நேர அங்காடி அமைக்க கோரி புளியக்குடி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பி. சுசீந்திரன்,டி.குமார் தலைமையில் தஞ்சாவூர் நாகை சாலையில் புத்தூர் ரோடு அருகில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.செந்தில்குமார் துவக்கி வைத்தார். நூற்றுக்கு மேற்பட்ட ஆண்கள் பெண்கள் பங்கேற்றனர் கோரிக்கை நிறைவேறும் வரை காத்திருப்பு போராட்டம் நடைபெறும் இந்தப் போராட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் எஸ்.திருநாவுக்கரசு,சி மணிகண்டன்,எம் ரமேஷ்,டி.ராமலிங்கம்உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் கலந்து கொண்டனர்.

இப் போராட்ட குழுவினருடன் பாபநாசம் வட்டாட்சியர் மணிகண்டன், அம்மாபேட்டை ஒன்றிய குழு தலைவர் கலைச்செல்வன் , அம்மாபேட்டை ஒன்றிய குழு துணை தலைவர் தியாக சுரேஷ் ,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜய், ராஜன், கூட்டுறவு சார் பதிவாளர் விஜய மாலா ஆகியோர் முன்னிலையில் வைகித்து அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் புளியங்குடி ஊராட்சி வடக்கு தோப்புபகுதியில் தற்காலிகமாக பகுதி நேர அங்காடியில் நகரும் அங்காடி மூலம் அத்தியாவசிய பொருளை வாரம் இருமுறை வழங்குவது என கூறப்பட்டதை தொடர்ந்து இதனை ஏற்றுக் கொண்டு தொடர் காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டனர்.

பேச்சுவார்த்தையில் அம்மாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசு, முதுநிலை ஆய்வாளர் வரதராஜன், வருவாய் ஆய்வாளர் மாலினி, கிராம நிர்வாக அலுவலர் சிங்காரவேலன், வங்கி செயலாளர் மதியழகன், விற்பனையாளர் லோகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்

Tags

Next Story