தாராபுரத்தில் மின்தடை மின்வாரியம் தீர்வு

தாராபுரத்தில் மின்தடை மின்வாரியம் தீர்வு

மின்தடைக்கு தீர்வு 

தாராபுரத்தில் காற்றால் தொடர் மின்தடை மின்வாரியம் தீர்வு காணப்பட்டது.

தாராபுரம் நகர் பகுதியில் கடந்த நான்கு நாட்களாக இரவு நேரத்திலும் பகல் நேரத்திலும் தொடர்ந்து மின்தடை ஏற்பட்டு வந்தது .இது குறித்து மின்வாரியத்திற்கு தொடர்ந்து பொதுமக்கள் சார்பில் புகார் செய்யப்பட்டது. காற்றின் காரணமாக ஒயர்கள் ஒன்றோடு ஒன்று உரசி பீஸ் போவதே மின் தடைக்கு காரணம் என்று கண்டறியப்பட்டது .

இதை அடுத்து மின்வாரிய தொழில் நுட்ப குழு வாகனங்களில் சென்று நகரின் முக்கிய பகுதிகளில் மின் ஒயர்கள் செல்லும் பகுதியில் உள்ள மரக்கிளைகலை வெட்டி அப்புறப்படுத்தினார்கள் .மேலும் ஜம்பர் அடித்து ஒயர்கள் ஒன்றோடு ஒன்று உரசா வண்ணம் ஏற்பாடுகளை செய்து மின் பிரச்சனைக்கு தீர்வை ஏற்படுத்தினார்கள் .

Tags

Next Story