நீட் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு -அமைச்சர் மனோதங்கராஜ்

நீட் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு -அமைச்சர் மனோதங்கராஜ்
குமரியில் மாணவர்களுக்கு புத்தகம் வழங்கிய அமைச்சர் மனோதங்கராஜ்
நீட் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என அமைச்சர் மனோதங்கராஜ் கூறினார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பை முன்னிட்டு கல்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 2024-25 க்கான வகுப்புகளை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தலைமையில் பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் குத்து விளக்கேற்றி இன்று தொடங்கி வைத்தார். பள்ளி மாணவ-மாணவிகளுக்கு புத்தகம் மற்றும் பள்ளியிலேயே ஆதார் அட்டை மற்றும் அஞ்சலக வங்கி கணக்கு திட்டத்தையும் தொடங்கி வைத்த அமைச்சர் மனோ தங்கராஜ் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் கடந்த 3-ஆண்டுகளாக பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதாகவும் நீட் விலக்கு பிரச்சனை தமிழக அளவில் பிரச்சனையாக இருந்தது தற்போது தேசிய பிரச்சனையாக மாறியுள்ளதாகவும் நல்ல முடிவு வரும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். மாவட்ட கல்வி அலுவலர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story