ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே தந்தையை கொலை செய்த மகன் கைது

ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே தந்தையை கொலை செய்த மகன் கைது

காவல் நிலையம்

ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே சொத்து பிரச்சனை காரணமாக தந்தையை கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு வணிகவைசியர் கீழத்தெருவில் வசித்து வந்தவர் மாமுண்டி (90) .இவரது மனைவி வெயிலுகாத்தாள்.இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ளனர்.மாமுண்டியின் மகன் கணேஷ்குமார் சென்னையில் ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கணேஷ்குமார் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வத்திராயிருப்பு வந்ததாகவும் தந்தை மாமுண்டியுடன் சொத்து பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு செய்ததாகவும் கூறப்படுகிறது.இந்த நிலையில் சொத்து பிரச்சனை காரணமாக தந்தை மாமுண்டியை கணேஷ்குமார் (55)அரிவாளால் தலையில் வெட்டிய நிலையில் சம்பவ இடத்திலேயே மாமுண்டி உயிரிழந்தார்.

பின்னர் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வத்திராயிருப்பு காவல்துறையினர் மாமுண்டியின் உடலை மீட்டு வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தந்தையை கொலை செய்த கணேஷ்குமாரை கைது செய்து வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சொத்துக்காக தந்தையை மகன் கொலை செய்த சம்பவம் வத்திராயிருப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story