முன்னாள் ராணுவ வீரரை இரும்பு கம்பியால் தாக்கிய மருமகன் கைது

முன்னாள் ராணுவ வீரரை இரும்பு கம்பியால் தாக்கிய மருமகன் கைது

பைல் படம் 

தூத்துக்குடி அருகே குடும்பத் தகராறில் முன்னாள் ராணுவ வீரரை இரும்பு கம்பியால் தாக்கிய அவரது மருமகனை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி அருகே குடும்பத் தகராறில் முன்னாள் ராணுவ வீரரை இரும்பு கம்பியால் தாக்கிய அவரது மருமகனை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி அருகேயுள்ள மேல கூட்டுடன்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துவீரன் மகன் சொரிமுத்து (57). முன்னாள் ராணுவ வீரர். இவரது மகளின் கணவர் பாலசுப்பிரமணியன் (26). இவர்கள் இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சனை இருந்துள்ளது.

இந்நிலையில் நேற்று பாலசுப்பிரமணியன், மாமனார் வீட்டில் தகராறு செய்து அவரை இரும்பு கம்பியால் தாக்கினாராம். மேலும் வீட்டின் முன் நிறுத்தியிருந்த கார் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினாராம். இதுகுறித்து புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் வழக்குப் பதிந்து பாலசுப்பிரமணியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Tags

Next Story